உலகின் அணுகுமுறை உனக்குள்
உன்னை ஆராய தூண்டும்.
மன அலைகள் அலைமோதும்
உற்று நோக்கும் தருணத்தில்,
எதை தேடுகிறோம் என்கிற அறியாமையால்,
எண்ணங்கள் நிலையற்று தடுமாறும்.
உன்னுள் காண்பாய் முறண்பாடுகள்,
போராட்டங்கள் ,தோல்விகள்.
தெளிவடையும் நிலையில், மனதில் ஓர்
ஏகாந்த நிம்மதி ,மகிழ்ச்சி.
விடை தெளியும் பல விடுகதைகள்
உன்னை நீயே அறிந்து கொள்வாய்.
செயல்கள் பலமுறை காரணமாகும்
எதிர்நோக்கும் நிகழ்வுகளுக்கு,
மனநிலை எபபொழுதும் அளவுகோலாகும்,
நம்மைச் சுற்றி நடப்பவைகளுக்கு.
தவறு எப்போதும் மற்றவர்களிடம் இல்லை
நாம் நாமே காரணமாவோம்.
சிந்தித்து ,ஆராய்ந்து செயல்படுவோமெனில்
தடை செய்யலாம் பல இன்னல்களை,
துயரங்களை ,பிரிவுகளை, துக்கங்களை.